Archives: பிப்ரவரி 2018

சரியான இடத்தில் மலர்தல்

களை என்பது நீ விரும்பாத இடத்தில் வளரும் ஒரு செடி என்று சொல்லி களையெடுக்கும் கருவியை என் கையில் கொடுத்தார் என் தந்தை. நான் பட்டாணி செடிகளுக்கூடே தானாக வளர்ந்திருக்கும் சோளச் செடியை விட்டு விட விரும்பினேன். ஆனால் பண்ணை அனுபவமிக்க என் தந்தை அதனைப் பிடுங்கிவிடச் சொன்னார். அந்த தனிமையான சோளக்கதிர் பயன் தருவதற்குப் பதிலாக பட்டாணிகளை அமிழ்த்தி அவற்றின் சத்துக்களை எடுத்துக் கொள்ளும் என்றார்.

மனிதர்கள் செடிகளல்ல. நமக்கு தானாகச் சிந்திக்கும் திறனுண்டு. அது தேவன் தந்த சுதந்திரம். ஆனால் நாம் தேவன் நமக்கென்று நியமிக்காத இடங்களில் மலர முயற்சிக்கின்றோம்.

சவுல் ராஜாவின் மகன் யுத்த வீரன். இளவரசன் யோனத்தான் தான் விரும்பியபடி செய்திருக்கலாம். அவன் தான் ஓர் அரசனாகுவதை எதிர்பார்ப்பதற்கு சரியான காரணங்களிருந்தன. ஆனால் அவன் தேவனுடைய ஆசீர்வாதம் தாவீதின் மீதிருந்ததைக் கண்டான். அவன் தன் தந்தையின் பொறாமை பெருமை ஆகியவற்றைக் கண்டு கொண்டான். (1 சாமு. 18:12-15). எனவே தனக்கு மறுக்கப்பட்ட அரியணையை பற்றிக் கொள்ள எண்ணுவதை விட்டு, தன் உயிரையும் பணயம் வைத்து யோனத்தான் தாவீதின் நெருங்கிய நண்பனானான் (19:1-6 ; 20:1-4). அவனுடைய உயிரையும் காத்தான்.

சிலர் யோனத்தான் மிக அதிகமாக விட்டுக் கொடுத்தான் என்கின்றனர். ஆனால் நாம் நினைக்கப்படும்படி என்ன செய்வோம்? பேராசை கொண்ட சவுலைப் போலவா? அவன் தன் அரசாட்சியைப் நிலைப்படுத்த நினைத்தான். ஆனால் அதை இழந்து போனான். அல்லது கனம் பெற்ற இயேசுவின் முன்னோர் பட்டியலில் இடம் பெற்ற ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றிய யோனத்தானைப் போலவா?

தேவனுடைய திட்டங்கள் நம்முடைய திட்டங்களை விட மேலானவை. நாம் அவருடைய திட்டங்களுக்கு எதிர்த்து நிற்போமாயின் தவறான இடத்தில் வளர்ந்த களையைப் போலாவோம். அல்லது அவருடைய வழி நடத்துதலை ஏற்றுக் கொள்வோமாகில் அவருடைய தோட்டத்தில் நாட்டப்பட்டு செழித்து வளர்ந்து கனிதரும் செடியைப் போலிருப்போம். இந்த தேர்ந்தெடுத்தலை அவர் நம்மிடம் விட்டு விட்டார்.

நியாயத்தீர்ப்பிற்கு மேம்பட்ட இரக்கம்

என்னுடைய குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டு என்னிடம் வந்து ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினர். நான் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியே பிரித்து, அவரவர் பிரச்சனையைச் சொல்லும்படி கேட்டேன். இருவரிடமுமே தவறு இருந்தமையால் எங்களின் உரையாடலின் முடிவில் ஒவ்வொருவரிடமும் தன்னுடைய உடன்பிறப்பின் இச்செயலுக்குத் தகுந்த நியாயமான நடவடிக்கை என்ன எடுக்கலாம் என்று கேட்ட போது இருவருமே உடனடியாக ஒரு தண்டனையைக் கொடுக்க வேண்டுமென்று கூறினர். அவர்கள் ஆச்சரியப்படும்படியாக நான் அவரவர் தன் உடன் பிறப்புக்கு எந்த தண்டனையைக் கொடுக்கும்படி விரும்பினார்களோ அதை அவர்களுக்கே கொடுத்தேன். உடனே ஒவ்வொரு குழந்தையும் இது நியாயமற்றது. நாங்கள் மற்றவருக்கு கொடுக்க நினைத்த தண்டனை எங்களுக்கே வந்தது. இது அடுத்தவருக்குத்தான் கொடுக்கப்பட வேண்டிய தண்டனை எனப் புலம்பினர்.

என்னுடைய குழந்தைகள் இரக்கமில்லாத நியாயத் தீர்ப்பைக் காண்பிக்கின்றனர். அதை தேவன் எதிர்க்கின்றார் (யாக். 2:13). பணம் படைத்தவர்களுக்கு அல்லது யாரேனும் ஒருவருக்குப் பாரபட்சமாக நிற்பதைக் காட்டிலும் நாம் பிறரை நம்மைப் போல நேசிக்க வேண்டும் என தேவன் நம்மிடம் விரும்புகிறார் (வச. 8) என்பதை யாக்கோபு நினைப்பூட்டுகின்றார். நாம் பிறரை நம்முடைய சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதும் அல்லது நமக்கு லாபமில்லாத ஒருவரை உதாசீனப்படுத்துவதற்குப் பதிலாக, நாம் எத்தனை அதிகமாக தேவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைத்து செயல்படுபவராக, நம்முடைய இரக்கத்தை அவர்களுக்குக் காண்பிப்போம் என யாக்கோபு அறிவுரைக் கூறுகிறார்.

தேவன் அவரது இரக்கத்தை நமக்குத் தாராளமாகக் கொடுத்துள்ளார். நாம் மற்றவர்களோடு கொண்டுள்ள தொடர்புகளில் நம் தேவன் நம்மீது காட்டியுள்ள இரக்கத்தை நினைத்து அதனைப் பிறருக்குக் கொடுப்போம்.

அணிந்து கொள்ளல்

நாம் அதிக கொந்தளிப்பு பகுதிக்குள் செல்கிறோம் என்பதைத் தெரிவிக்க, விமானி இருக்கை பெல்ட்டை அணிந்து கொள்ளும்படி அறிவிக்கும் அடையாள விளக்கை எரிய விட்டார். தயவு கூர்ந்து உங்கள் இருக்கைகளுக்கு உடனடியாகத் திரும்பிச் சென்று பாதுகாப்பாக உங்கள் இருக்கை பட்டைகளை அணிந்து கொள்ளுங்கள், இந்த எச்சரிப்பை விமானப் பணியாளர்கள் தேவையான போது கொடுக்கின்றனர். கொந்தளிக்கும் காற்றுப் பகுதியில் விமானம் செல்லும்போது இருக்கைப் பட்டை அணியாத பிரயாணிகள் காயப்பட வாய்ப்புள்ளதால், பாதுகாப்போடு தங்கள் இருக்கையில் இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக கொந்தளிப்புப் பகுதியைக் கடந்து விடலாம்.

அநேகமான நேரங்களில் நாம் கலக்கத்தைத் தரும் அனுபவங்களை நாம் சந்திக்க இருக்கின்றோம் என நம் வாழ்வில் எச்சரிப்பு தரப்படுவதில்லை. ஆனால் நம் அன்புத் தந்தை நம்முடைய போராட்டங்களைத் தெரிந்து, கவனித்து நம்முடைய கவலைகள், காயங்கள், பயங்களை அவரிடம் கொண்டு வரும்படி அழைக்கின்றார். நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல் எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யும் கிருபையை அடையவும் தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் (எபி. 4:15-16) என வேதாகமம் சொல்லுகிறது.

கொந்தளிக்கும் காலங்களில் ஜெபத்தின் மூலம் நம் தந்தையிடம் செல்வதே நாம் செய்யக் கூடிய சிறந்த செயல். நமக்குத் தேவையான போது கிருபை உதவி செய்யும் என்ற சொற்றொடர் சொல்வது அவருடைய பிரசன்னத்தில் நாம் இணைக்கப்பட்டிருந்தால் நம்மை பயமுறுத்தும் வேளைகளில் சமாதானத்துடன் இருக்க முடியும். ஏனெனில் நாம் நம் தேவைகள் எல்லாவற்றையும் பெரியவரிடம் கொண்டு வந்து விட்டோம். வாழ்வின் பிரச்சனைகள் நம்மை மேற்கொள்ளும் போது நாம் ஜெபிக்கலாம். அவரால் மட்டுமே நம் வாழ்வின் கொந்தளிப்பினூடாய் உதவ முடியும்.

எட்டுக்கால் பூச்சியும், தேவனுடைய பிரசன்னம்

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும் ... தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும்... வேண்டிக்கொள்கிறேன். எபேசியர் 3:16-19. எட்டுக்கால் பூச்சிகள் - எந்தவொரு குழந்தையும் இவற்றை விரும்புவதில்லை. அதுவும் அவர்கள் தூங்கப் போகும் நேரத்தில் அவர்கள் அறையில் இருப்பதை விரும்புவதில்லை. என்னுடைய மகள் தூங்குவதற்கு தயாராகும் போது அவளுடைய படுக்கைக்கு மிக அருகில் ஒன்றைக் கண்டுவிட்டாள். அப்பா... எட்டுக்கால் பூச்சி... எனக் கத்தினாள். எத்தனைத் தேடியும் அந்த எட்டுக்கால் பூச்சியைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அது உன்னைக் கடிக்காது என்று அவளுக்கு உறுதியளித்தேன். ஆனால் அவள் நம்பவில்லை. நான் அவளின் படுக்கைக்கு அருகிலேயே காவல் இருக்கிறேன் என்று சொன்ன பின்பு தான், ஏற்றுக் கொண்டாள். நான் அவள் படுக்கையினருகில் நின்று கொண்டிருக்க, அவள் தன் படுக்கைக்குச் சென்றாள்.

என்னுடைய மகள் படுத்தப்பின்பு நான் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு, நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். நான் உன்னருகிலேயே இருக்கின்றேன். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள். தேவன் உன்னை அம்மாவையும் அப்பாவையும் விட அதிகமாக நேசிக்கின்றார். அவர் உனக்கு மிக அருகில் இருக்கின்றார். நீ பயப்படும் போதெல்லாம் அவரிடம் ஜெபி என்றேன். அது அவளைத் தேற்றுவதாக இருந்தது. அவளும் சமாதானத்துடன் சீக்கிரத்தில் தூங்கி விட்டாள்.

தேவன் நம் அருகிலேயே இருக்கிறாரென வேதாகமம் திரும்பத் திரும்ப நமக்கு உறுதியளிக்கின்றது (சங். 145:18, ரோ. 8:38-39. யாக். 4:7-8). சில வேளைகளில் நாம் இதை நம்புவதற்குத் தடுமாறுகிறோம். எனவே தான் பவுல் எபேசு சபை விசுவாசிகள் உள்ளான மனுஷனில் வல்லமையாய் பெலப்பட்டு உண்மையை புரிந்து கொள்ளும்படி ஜெபம் செய்கிறார். நாம் பயந்தோமாகில் தேவனுடைய பாதையை விட்டு விலகி விடுவோம். நான் என் மகளின் கரத்தை அன்போடு பற்றியபோது அவள் அமைதியாக அன்றிரவு தூங்கிவிட்டதைப் போன்று ஜெபத்தின் மூலம் நம்முடைய பரலோகத் தந்தையும் நம் அருகில் வந்திருக்கின்றார்.

பெரிய மருத்துவர்

மருத்துவர் ரிஷி மான்சன்டா தன்னிடம் வரும் நோயாளிகளிடம் நீ எங்கே வசிக்கிறாய்? என்று கேட்கும் போது அவர் அவர்களுடைய விலாசத்தையும் விட அதிகமான ஒன்றை எதிர்பார்க்கின்றார். ஒரு திட்டத்தை அவர் காண்கின்றார். அவரிடம் உதவிக்காக வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் சுற்றுப்புற அழுத்தத்தில் வாழ்வதாகக் கண்டுபிடிக்கின்றார். இளக்கமான மணல் வகை, பூச்சிகள், மற்றும் பாக்டீரியாக்களால் உருவாகும் நச்சு ஆகியவை அவர்களை நோயாளிகளாக்குகிறது. எனவே இந்த மருத்துவர் ஒரு வழக்கறிஞராகவும் செயல்படுகின்றார். அவர் தன்னை எதிர் நீச்சல் போடும் மருத்துவர் என அழைக்கின்றார். இவ்வகை மருத்துவர்கள் சுகாதாரத்தைப் பேணும் பணியாளர்களாகவும் தேவைப்படும்போது மருத்துவ உதவியும் செய்பவர்களாகவும், செய்பவராகவும், நோயாளிகளோடும் அவர்கள் வாழும் சமுதாயத்தோடும் இணைந்து வேலை செய்து அதனை நல்ல சுகாதாரமான இடமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

இயேசுவும் தன்னிடம் வந்தவர்களைச் சுகமாக்கினார் (மத். 4:23-24). இயேசு அவர்களின் சரீர சுகத்தையும் உலகத் தேவையையும் தாண்டி அவர்கள் கண்கள் மேலான ஒன்றை நோக்கச் செய்தார். அவருடைய மலைப் பிரசங்கத்தில் ஒரு மருத்துவ அற்புதத்தையும் விட மேலானவற்றைக் கொடுத்தார் (5:1-12). இயேசு ஏழு முறை, மனதும் இருதயமும் எப்படியிருந்தால் ஒரு புதிய கண்ணோட்டத்தோடும் ஆன்ம நலத்துடனும் கூடிய ஒரு நல்வாழ்வு அமையும் எனவும் (வச. 3-9) இரண்டு முறை கொடூரமான துன்பங்களை அனுபவிப்பவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இயேசுவின் மேல் நம்பிக்கையையும் அவருடைய வீட்டையும் அடைவர் எனவும் கூறுகின்றார் (வச. 10-12).

இயேசுவின் வார்த்தைகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. நான் எங்கே வாழ்கின்றேன்? என்னுடைய சுகவாழ்வு, உலகத் தேவைகளையும் விட மேலானது ஒன்றுள்ளது என்பதை எவ்வளவு தெரிந்து வைத்துள்ளேன்? நான் ஓர் அற்புதத்தைப் பெற ஏங்கிக் கொண்டிருக்கையில், ஓர் எளிமையான, உடைக்கப்பட்ட, பசியுள்ள, இரக்கமுள்ள, சமாதானம் பண்ணுகின்ற, இயேசு பாக்கியவான் என அழைக்கும் ஓர் இருதயத்தைத் தழுவிக் கொள்கிறேனா?